புத்தாண்டு 2021 புது வாழ்வைத் தரட்டும் !

Posted by Admin December 27, 2020

New Year 2021

அன்புடையீர்,

வணக்கம்.

இப்பவும் நாம் எல்லோரும் நன்கறிந்த திருவாளர் 2020 வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதியுடன் விடை பெற உள்ளார். இதற்காக 31-ஆம் தேதியன்று இரவு 23:59 மணியளவில் மேளதாளத்துடன் நடைபெற உள்ள வழியனுப்பு விழாவில் அவரது 12 மனைவிகள், 52 குழந்தைகள், 366 பேரக்குழந்தைகள் என எல்லோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் திருவாளர் 2020 தன்னுடைய ஓய்வுடன், உங்களது பிரச்சனை, நூதன நோய், பண நெருக்கடி, தொழில் முடக்கம், அவமானம், இயலாமை, முன்னேற்றமின்மை, தோல்வி, கவலை ஆகியவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு செல்வதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களிடம் தெரிவிக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

அதே நேரம் அவரது பின்தொடர்ச்சியாக ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 00:00 மணிக்கு வரும் திருவாளர் 2021, தான் அனைத்தையும் ஈடு செய்வேன் என்றும், குறிப்பாக நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்வு, ஏற்றம்தரும் தொழில், கை நிறைய வருமானம், அச்சமின்மை, எதிலும் வெற்றி, நிரந்தர மகிழ்ச்சி, அன்பான குடும்பம், அமைதி, பதவி, வீடு, மனை, வாகனம் என எல்லாவற்றையும் கட்டாயம் தருவேன் என்றும் உறுதிப்படக் கூறி, அதனையே தனது வாழ்த்துச் செய்தியாக உங்களுக்குத் தெரிவிக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்.

பட்ட துன்பங்களையெல்லாம் திருவாளர் 2020 உடன் அனுப்பிவிட்டு, நலம் நாடி நல்லதைத் தர வரும் திருவாளர் 2021-ஐ இருகரம் கூப்பி வரவேற்கத் தயாராவோம்.

விழாக்கால வாழ்த்துகள் !

www.shripathirajanpublishers.com

ⓒ P.R.Jayarajan 2021