பொது ஊழியர்கள் சிலருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு தமிழ்நாட்டிற்காக லோக் ஆயுக்தா என்ற அமைப்பினை நிறுவுவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இது 13/11/2018-ஆம் தேதியில் அமலுக்கு வந்துள்ளது.
எல்லோருக்கும் பயன் தரும் இந்த நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு மொழிப்பதிப்பாக வெளி வந்துள்ளது.
மேலும் மைய அரசு அளவில் பொருந்தக்கூடிய The Lokpal and Lokayuktas Act 2013 சட்டமும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.