தமிழகக் கலைகள் என்ற இந்நூலினை எழுதிய மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்பவர் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார். தமிழகக் கலைகள் என்பது, தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த பல்வேறு கலைகள் பற்றி எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆகும். தமிழகத்தின் கலைகளுள் பதினொரு வகைக் கலைகள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்நூல் பின்வரும் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- கலைகள் கட்டடக்கலை
- ஓவியக்கலை
- சிற்பக்கலை
- வார்ப்புக்கலை
- இசைக்கலை
- நடனக்கலை
- நாடகக்கலை
- மருத்துவக்கலை
- சமயக்கலை
- தத்துவக்கலை
- இலக்கியக்கலை
- இளங்கலை,
முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்னும் புதிய பாடம் அறிமுகப் படுத்தப்பட்ட போது அதைக் கற்பிப்பதற்குத் தனி நூல் எதுவும் இருக்கவில்லை. இப்பாடத்துள் அடங்கிய தமிழகக் கலைகள் என்னும் பகுதியைக் கற்பதற்கு மாணவர்களுக்கு உதவுவதையும், தமிழார்வம் கொண்ட பொதுமக்களுக்குப் பயன்படுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நூல் அச்சமயத்தில் எழுதப்பட்டது. தற்போது இந்நூல் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தருவதாக உள்ளது.