இந்தியாவின் புவியியல் பற்றி மிக விரிவாக தமிழில் வெளி வந்துள்ள முதல் நூல் என்று இந்த நூலை சொன்னால் அதில் மிகையொன்றுமில்லை. இந்த நூல் மைய மற்றும் மாநில ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கும் மற்றும் புவியியலை முக்கிய பாடமாக எடுத்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன் தரக்கூடியதாகும். இந்த நூலில் ஆசிரியர் முனைவர் ச.சேதுராக்காயி அவர்கள் நிறைய புள்ளி விவரங்களை துல்லியமாக கொடுத்து எளிய தமிழில் சிறப்புற விளக்கியுள்ளார். இதில், இந்தியாவின் புவியியல் தொடர்பாக
- (1) அமைவிடம்,
- (2) இயற்கையமைப்பு,
- (3) காலநிலை,
- (4) நதிகள்,
- (5) மண் வகைகள்,
- (6) இயற்கை தாவரங்கள்,
- (7) நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு திட்டங்கள்,
- (8) வேளாண்மை உணவுப் பயிர்கள்,
- (9) பணப்பயிர்கள்,
- (10) தோட்டப்பயிர்கள்
- (11) கால்நடைகள் மற்றும் மீன் வளங்கள்,
- (12) வேளாண்மைப் பிரதேசங்கள்,
- (13) கனிம வளங்கள்,
- (14) சக்தி வளங்கள்,
- (15) தொழற்சாலைகள் - நெசவுத் தொழிற்சாலைகள்,
- (16) உலோகத் தொழற்சாலைகள்,
- (17) பொறியியற் தொழற்சாலைகள்,
- (18) இரசாயனத் தொழிற்சாலைகள்,
- (19) விவசாயம் மற்றும் காடு சார்ந்த தொழிற்சாலைகள்,
- (20) தொழிற்சாலைப் பிரதேசங்கள்,
- (21) போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு,
- (22) வாணிபம்,
- (23) மக்கள் தொகை
என எல்லா முக்கிய தலைப்புகளிலும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
இந்த அரிய நூலை நழுவ விடாதீர்கள்.