தமிழகப் பல்கலைக்கழகங்களில் "இந்தியப் பொருளாதார வளர்ச்சி'' என்ற படிப்புத்துறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் இது ஒரு முக்கியப்படமாக உள்ளது. தமிழில் கல்வி பயிலும் மற்றும் தமிழில் தேர்வு எழுத முனையும் மாணவர்களுக்கு தமிழில் தக்க நூல்கள் இல்லாமல் அல்லற்படுகின்ற நிலையை போக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் முதல்வரும் பொருளியல் துறைத்தலைவருமான டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் பொருளியல் குறித்து தமிழில் எழுதிய முக்கிய நூல்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் இந்த "இந்தியப் பொருளாதார வளர்ச்சி'' என்ற நூல்.
பல பகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்த நூலின் முதல் பகுதி இந்திய பொருளாதாரத்தின் இயல்பும் அமைப்பும் பற்றி கூறுகின்றது. அடுத்து வரும் பகுதிகளில் இந்தியாவின் வளங்கள், இந்திய பொருளாதாரக் கட்டமைப்பு, நமது நாடு சந்தித்து வரும் சிக்கல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. 5-ஆம் பகுதியில் வேளாண்மைத்துறை, 6-ஆம் பகுதியில் தேசிய வங்கி, 7-ஆம் பகுதியில் உணவுக்கொள்கை என இந்திய பொருளாதாரம் பற்றி மிக விரிவாக செல்கின்றது இந்நூல்.
பயனுள்ள நூல்.
Economics, MaPa, Gurusamy, Sarvodaya