தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் புதிய முறை வினாத்தாளின்படி சீரமைக்கப்பட்டு 9-ஆம் பதிப்பில் வெற்றிகரமாக வெளிவந்துள்ள ''நாட்டிடைச்சட்டம்' (International Law) என்ற இந்த நூல் சட்ட மாணவ சமுதாயத்திற்கு ஓர் வரப்பிரசாதம் என்ற கூற வேண்டும்.
புதிய முறையின்படி மூன்றாண்டு சட்டக்கல்வியில் 2019-ஆம் ஆண்டு முதலும், ஐந்தாண்டு சட்டக்கல்வியில் 2022-ஆம் ஆண்டு முதலும் தேர்வு வினாத்தாளில் பிரச்சனை வினாக்கள் (Problem Questions) கேட்கப்படுகின்றன. அவற்றுக்கு விடை தரும் முகமாக இந்நூலின் ஆசிரியர் சட்டத் தமிழாய்வு அறிஞர் மற்றும் வழக்குரைஞர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் தனது எளிமையான சட்டத்தமிழ் நடையில் மொத்தம் 18 பிரச்சனைகளுக்கு விளக்கமான முறையில் தீர்வு தந்துள்ளார். அவை அந்தக் குறிப்பிட்ட பிரச்னைக்கு மட்டுமல்லாது, அது தொடர்பாக வேறு வடிவில் கேட்கப்படும் பிரச்சனை வினாக்களுக்கும் பதில் அளிக்க உதவிகரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்கமுடியாது.
அச்சுத்தாளின் தொடர் விலையேற்றம், தாள் தட்டுப்பாடு ஆகிய இடர்பாடுகளை சமாளித்து தரமான தாளில், நேர்த்தியான அச்சடிப்பில், பொருள் பொருந்திய எழிலான அட்டைப்படத்துடன், நியாயமான விலையில் வெளிவந்துள்ள இந்த 9-ஆம் பதிப்பு சட்ட மாணவ மாணவியரின் தேர்வு வெற்றிக்கு இப்போதே கட்டியம் கூறுவதாகும்.
வாழ்த்துகளுடன் ....
SPRP, PRJ, International Law