பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முறையை மொத்தமாக, ஒரே தொகுப்பாக, ஒன்றோடொன்று பிணைப்புடைய ஒரு முழுமையான அமைப்பாகக் கருதி ஆராய்கின்றது. ஆதலால், இதனை தொகையினப் பெருநோக்குப் பொருளியல் என்றும் கூறலாம். நாட்டின் மொத்த உற்பத்தி, சேமிப்புகளின் தொகுப்பு, மொத்த முதலீடு என்று எல்லாவற்றையும் சேர்த்து இது ஆராய்கின்றது.
இந்த நூலில் பேராசிரியர் திரு மா.பா.குருசாமி அவர்கள் பேரியல் பொருளாதாரத்திற்கு இலக்கணமும் விளக்கமும் தந்து விட்டு தொடர்ந்து நாட்டின் வருவாய், வேலை வாய்ப்பு நிலைகள் மற்றும் அதன் கோட்பாடுகள், நுகர்வுச் சார்பு, பெருக்கி, முடுக்கிக் கோட்பாடு, கீன்சின் கோட்பாடுகள், முதலீட்டு சார்பு, மூலதனம், உபரி மதிப்பு, கார்ல் மார்ஸ் கருத்துகள், பணக்கொள்கை, நிதிக்கொள்கை என பல்வேறு தலைப்புகளில் பேரியல் பொருளியலை அழகாக விளக்குகின்றார்.
பொருளாதாரம் பாடத்தை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு இது பன்னெடுங்காலமாக ஒரு தவிர்க்க இயலாத நூல்.
MaPa, Gurusamy, Sarvodaya, Economics