தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல்
தமிழ்நாடு அரசுப்பணியில் நுழைந்தவுடன் ஒரு அரசுப்பணியாளர் முதற்கண் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை, அரசு அலுவலக நடைமுறைகள்தாம் என்று சொன்னால் அது மிகையன்று. இதன் பொருட்டு நடைபெறும் துறை சார்ந்த தேர்வுகளிலும் அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு உதவிடும் வண்ணம் இந்நூல் ஓர் பாட நூலாக அமைந்துள்ளது.
இந்நூல் மொத்தம் 172 பத்திகள், 23 அத்தியாங்கள் மற்றும் 28 இணைப்புகளுடன் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது.
பாகம் 1-இல், பத்தி 1 முதல் 154 வரை, வருவாய் அலுவலங்களில் கடைபிடிக்க வேண்டிய அலுவலக நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றது.
பாகம் 2- இல் பத்தி 155 முதல் 172 வரை ஏனைய அலுவலகங்களுக்கான வேறு சில அறிவுரைகளைக் குறிப்பிடுகின்றது.
இந்த நூல் தமிழக அரசாணைபடி தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் என்று தற்போது நிலை பெற்றுள்ளது.
இந்நூல் தமிழக அரசு பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் வாங்கி கவனமுடன் படித்து தெரிந்து மற்றும் தெளிய வேண்டிய நூலாகும்.