இரண்டே வரிகளில் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவங்களைச் சொல்வது திருக்குறள். சிறியது என்றாலும் குறள் காட்டும் நெறிகள் பெரும் சிந்தனைக்குரியது. இதை நாம் எப்போதும், எங்கும் வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் கைக்கு அடக்கமானதொரு நூலாக வெளியிட்டு வாசிப்பவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் சாந்தா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர். குறளுக்கான உரையை அதைப்போலவே குறுகத்தந்து, நமது மனதில் எளிதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார் புலவர் திரு ச.ஸ்ரீனிவாசன் அவர்கள்.
ஒரு கட்டுக்கு இரண்டு வீதம் அடங்கியுள்ள இந்த திருக்குறள் நூல்களில், ஒன்றை நமது வாசிப்புக்கு வைத்துக் கொள்ளலாம்; மற்றொன்றை நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பரிசாகக் கொடுத்து மகிழலாம்.
வாருங்கள் குறள் நெறியை உலகெங்கும் பரப்புவோம்.