General Books

உலகம் சுற்றினோம் - பல்வேறு நாடுகளின் பயண அனுபவம் (ஐரோப்பா தொடங்கி துருக்கி முடிய) (We Travelled Around the World)

53122 Views
₹ 90
  • Binding : Paperback
  • Author : Mrs. Chandrika Rajamohan
  • Pages : 144
  • Publisher: Santha Publishers
  • Language: Tamil
  • In stock, Only 3 Left

Delivery to

Description

கொரோனா தொற்றால் கடந்த ஈராண்டு காலமாக வெளிநாட்டு சுற்றுலா என்பது கானல் நீராகிய இந்த வேளையில், சுற்றுலாவாசிகளை தட்டி எழுப்பி உற்சாகமூட்டும் வண்ணம் ''உலகம் சுற்றினோம்'' என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது என்று சொன்னால் அதில் சற்றும் மிகையில்லை. திரு ஏ.வி.எம்.சரவணன் அணிந்துரை தந்து மகிழ்ந்த இந்த நூலின் தொடக்கமே ''வெளிநாட்டு பயணங்களை திட்டமிடுதல்'' எப்படி என்பதற்கான முக்கிய குறிப்புகளுடன் ஆரம்பிக்கின்றது. அது சரி ... யார் பயணம் செய்து இந்த நூலை எழுதியது என்று நீங்கள் ஆர்வமுடன் கேட்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

பி.எட். பட்டப்படிப்பு தொடங்கி கல்வியியல் தொடர்பான பல்வேறு நூல்களை, ''சாந்தா பப்ளிஷர்ஸ்'' என்ற பதிப்பகத்தை நிறுவி பல்லாண்டுகளாக வெளியிட்ட பெருமைக்கு சொந்தக்காரர் பதிப்பகச்செம்மல் திரு. க.கணபதி அவர்களின் மகளும், இன்று ''சாந்தா பப்ளிஷர்ஸ்'' பதிப்பகத்தை தனது தந்தையின் அடியொற்றி வெற்றிகரமாக தொடர்ந்து நடாத்தி வரும் அதன் உரிமையாளருமான திருமதி சந்திரிகா ராஜ்மோகன் அவர்கள்தான் உலக நாடுகள் பலவற்றுக்கும் தனது கணவரும் தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகருமான திரு ஆர்.ராஜமோகன் அவர்களுடன் சென்று வந்து இந்த நூலை படைத்துள்ளார்.

இந்த நூல் ஐரோப்பிய பயணத்தில் தொடங்கி, ஜேர்மனி, ஆஸ்திரியா, வியன்னா என நீண்டு, பின் எகிப்து, இங்கிலாந்து என பறந்து, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என சுற்றி பார்த்து, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஹாங்காங், ஏதென்ஸ், துருக்கி என உலகை அழகாக வலம் வருகின்றது. சென்னை மாநகராட்சியின் கல்வி நிலைக்குழு மேனாள் தலைவராக பதவி வகுத்த  நூலாசிரியர் திருமதி சந்திரிகா ராஜமோகன் அவர்கள் ஒவ்வொரு நாட்டின் பயண அனுபவத்தையும், ஓர் சுற்றுலாக்கல்வியியல் பாடமாக தனது இந்த நூலில், சுவைபட விவரிக்கின்றார்.

''உலகை சுற்றி வந்தோம்'' என்பதற்காக நூலாசிரியர் திருமதி சந்திரிகா அவர்கள், சுற்றி வளைத்து நிறைய எழுதாமல், சுருக்கமாக, சுவாரஸ்யமாக இந்த நூலை எழுதியிருப்பது, வாசிப்பவர்களுக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றது.

கொரோனா அலை ஓய்ந்து வரும் இந்த தருணத்தில், இந்நூல் வெளிநாட்டு சுற்றுலா பற்றிய மகிழ்ச்சி அலையை பரப்பும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நிறைவாக, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது தந்தை பதிப்பக செம்மல் திரு க.கணபதி அவர்களின் பெயரைச் சூட்ட அரசு ஆணை பெற்ற பெருமை கொண்டவர் இந்த நூலாசிரியர் திருமதி சந்திரிகா ராஜமோகன் அவர்கள் என்பதைச் சொல்லி எனது இந்த நூல் மதிப்புரைக்கு திரையிடுகின்றேன்.

நன்றி வணக்கம்.

- வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன்.

 

Santha, World, Chandrika

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books